சாலை வரி என்பது இந்தியாவில் ஓட்டப்படும் ஒவ்வொரு வாகனத்தின் மீதும் விதிக்கப்படும் ஒரு கட்டாய வரியாகும். கார்கள், லாரிகள், பைக்குகள் அல்லது வேறு எந்த வாகனமாக இருந்தாலும், பொதுச் சாலையில் செல்லும் ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் இந்த வரி விதிக்கப்படுகிறது. சாலை கட்டமைப்பைப் பராமரிப்பதற்காக மாநில அரசு இந்த சாலை வரியை விதிக்கிறது. வசூலிக்கப்படும் இந்த வரியானது, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அமைப்பை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படலாம். இந்தியாவில் சாலை வரி, அதன் கணக்கீடு, ஆன்லைனில் சாலை வரியைச் செலுத்துவது எப்படி மற்றும் சாலை வரி ரீஃபண்ட் ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
குறைவாகப் படிக்கவும்
இந்தியாவில் வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சாலை வரியைச் செலுத்த வேண்டும். நீங்கள் பிரைவேட் வாகனம் வைத்திருந்தாலும் சரி, கமர்ஷியல் வாகனம் வைத்திருந்தாலும் சரி, மோட்டார் வாகனச் சட்டங்களின்படி சாலை வரி செலுத்துவது கட்டாயமாகும். இந்த வரி, வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
மூன்று காரணிகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலமும் தனது சொந்த சாலை வரியை விதிக்கிறது. இந்தக் காரணிகள் பின்வருமாறு:
வழக்கமாக, ஒரு வாகன உரிமையாளர் இந்த வரியை வாகனத்தை வாங்கும்போதே செலுத்திவிடுவார். விற்பனையாளர் உங்களுக்கு ஒரு வாகனத்தை விற்கும்போது, அவர் அந்த வாகனத்தைப் பதிவுசெய்தால் மட்டுமே இந்த வரியை எக்ஸ்-ஷோரூம் விலையுடன் சேர்ப்பார். இருப்பினும், உங்கள் வாகனத்தை நீங்களே பதிவுசெய்தால், உங்கள் மாநிலத்தின் விதிமுறைகளின்படி சாலை வரியை RTO-விலேயே நீங்கள் செலுத்தலாம்.
மேலும், உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு, உதாரணமாக, டெல்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினால், நீங்கள் அந்த மற்றொரு மாநிலத்திலும் சாலை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ஒரு மாநிலத்தில் சாலை வரியை நேரடியாகவும் ஆன்லைனிலும் செலுத்தலாம். கீழே, இரண்டு வழிகளையும் விளக்கியுள்ளோம்:
பரிவாஹன் சேவா என்ற அரசு இணையதளம், டெல்லியில் உள்ள வாகன விவரங்கள் அல்லது வாகன உரிமையாளர்களின் விவரங்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். அதற்கான வழிமுறைகள் இதோ:
நீங்கள் RTO-விற்கு நேரில் சென்று சாலை வரியைச் செலுத்த விரும்பவில்லை என்றால், பரிவாஹன் சேவா போர்ட்டல் மூலம் அதை ஆன்லைனில் செலுத்தலாம். இந்த போர்ட்டல் உங்கள் மாநிலத்தில் சாலை வரியை ஆன்லைனில் செலுத்த உதவுகிறது. சாலை வரியை ஆன்லைனில் செலுத்த, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
குறைவாகப் படிக்கவும்
*குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாலை வரியை ஆன்லைனில் செலுத்தும் சேவையானது, கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டுமே உள்ளது.
மேலும், சாலை வரியை ஆன்லைனில் செலுத்துவதற்கு நீங்கள் அந்தந்த மாநிலப் போக்குவரத்து இணையதளத்தையும் அணுகலாம். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களுமே வரி செலுத்துவதற்கானத் தங்கள் ஆன்லைன் போர்ட்டலைக் கொண்டுள்ளன, அதில் நீங்கள் சாலை வரியை ஆன்லைனில் செலுத்தும் வசதியைத் தேர்வு செய்யலாம்.
1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை வரியை உரிய நேரத்தில் செலுத்துவது கட்டாயமாகும். பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், உங்கள் மாநில அரசு அபராதம் விதிக்கும், அதை நீங்கள் செலுத்த வேண்டிய சாலை வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். பொதுவாக, சாலை வரியைச் செலுத்துவதற்கு மாநில அரசு 15 நாட்கள் அவகாசம் வழங்கும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாவிட்டால், நிலுவையில் உள்ள சாலை வரியின் 50% முதல் 100% வரை அபராதமாக விதிக்கப்படலாம்.
எனவே, உங்கள் வாகனத்தின் சாலை வரியை உரிய நேரத்தில் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் உங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு பெரும் அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
இரண்டு சூழ்நிலைகளின் கீழ் சாலை வரியை ரீஃபண்ட் பெறலாம்.
முதலாவதாக, உங்கள் வாகனம் பழுதுபார்க்க முடியாத நிலையை அடைந்தால், அதாவது முழுமையாகச் சேதமடைந்தால், மீதமுள்ள ஆண்டுகளுக்கான வரியை உங்கள் மாநில RTO-விலிருந்து நீங்கள் ரீஃபண்ட் பெறலாம். உதாரணமாக, நீங்கள் மாநிலத்திற்கு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரியைச் செலுத்தியிருந்து, 10 ஆண்டுகளிலேயே உங்கள் வாகனம் முழுமையாகச் சேதமடைந்து பழுதுபார்க்க முடியாததாகிவிடும் சூழலில்.
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள RTO-வில் மீதமுள்ள 5 ஆண்டுகளுக்கான சாலை வரியை ரீஃபண்ட் பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
வரியை ரீஃபண்ட் பெறுவதற்கான இரண்டாவது சூழ்நிலை, நீங்கள் ஒரு புதிய மாநிலத்திற்குக் குடிபெயரும் சூழ்நிலை. இந்தச் சூழலில், உங்கள் புதிய வாகனத்தை அந்தப் புதிய மாநிலத்தின் RTO-வில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, உங்கள் பழைய RTO-விடமிருந்து உங்களுக்கு NOC தேவைப்படும்.
எனவே, மீதமுள்ள வரித் தொகைக்கு, நீங்கள் முதலில் இருந்த RTO-வில் வரி ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், புதிய மாநிலத்தில் அவர்களின் விதிகளின்படி மீண்டும் சாலை வரியை நீங்கள் செலுத்தலாம்.
குறைவாகப் படிக்கவும்
உங்கள் தற்போதைய RTO-வில் இருந்து சாலை வரி ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் ஆவணங்களுடன் RTO-விற்கு நேரில் செல்ல வேண்டும்:
குறைவாகப் படிக்கவும்
கீழே, இந்தியாவின் சில முக்கிய மாநிலங்களின் சாலை வரியைக் குறிப்பிட்டுள்ளோம். பாருங்கள்:
| எக்ஸ்-ஷோரூம் விலை | டெல்லியில் உள்ள சாலை வரி |
| ரூ. 6 லட்சம் வரை | பெட்ரோல்: 4%, டீசல்: 5% |
| 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை | பெட்ரோல்: 7%, டீசல்: 8.75% |
| ரூ. 10 லட்சத்திற்கு மேல் | பெட்ரோல்: 10%, டீசல்: 12.5% |
| எலக்ட்ரிக் கார் | பூஜ்ஜிய சாலை வரி |
| 50 cc-க்கு குறைவான இருசக்கர வாகனங்கள் | ரூ. 650 |
| 50 cc-க்கு அதிகமான இருசக்கர வாகனங்கள் | ரூ. 1,220 |
| காரின் விலை | புதிய கார் பதிவின் மீதான சாலை வரி |
| விலை < 10 லட்சம் | சி.என்.ஜி.: 7% பெட்ரோல்: 11% டீசல்: 13% |
| 10 லட்சம் - 20 லட்சம் | பெட்ரோல்: 12% டீசல்: 14% |
| 20 லட்சத்திற்கு மேல் | பெட்ரோல்: 13% டீசல்: 14% |
| இரு சக்கர வாகனங்கள் | சாலை வரி |
| 99 cc வரை | 10% |
| 100 cc முதல் 299 cc வரை | 11% |
| வாகன வகை | ஓராண்டுக்கான தொகை (ரூபாயில்) |
| ரூ. 20,000 முதல் ரூ. 60,000 வரையிலான இருசக்கர வாகனங்கள் | 4% |
| ரூ. 60,000 முதல் ரூ. 2 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்கள் | 6% |
| ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான கார்கள் | மதிப்பில் 3% |
| ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான கார்கள் | மதிப்பில் 3% |
| ரூ. 6 முதல் 10 லட்சம் வரையிலான கார்கள் | மதிப்பில் 6% |
| ரூ. 10 முதல் 20 லட்சம் வரையிலான கார்கள் | மதிப்பில் 8% |
| ரூ. 20 லட்சத்துக்கு அதிகமான கார்கள் | மதிப்பில் 9% |
| வாகனத்தின் விலை | சாலை வரி |
| ரூ. 50,000-க்கு குறைவான புதிய இருசக்கர வாகனங்கள் | 10% |
| ரூ. 50,000-க்கு அதிகமான புதிய இருசக்கர வாகனங்கள் | 12% |
| ரூ. 5 முதல் ரூ. 10 லட்சம் வரையிலான நான்கு சக்கர வாகனங்கள் | 14% |
| ரூ. 10 முதல் ரூ. 20 லட்சம் வரையிலான நான்கு சக்கர வாகனங்கள் | 17% |
| ரூ. 20 லட்சத்திற்கு அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் | 18% |
ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வகையான வாகனங்களுக்கு வெவ்வேறு சாலை வரி உள்ளது. இது வாகனத்தின் வயது, எக்ஸ்-ஷோரூம் விலை, எடை மற்றும் இன்ஜின் cc ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
ஆம், வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியரும், தமது வாகனத்தைப் பதிவு செய்துள்ள மாநிலத்திற்குச் சாலை வரி செலுத்துவது கட்டாயமாகும்.
ஆம், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒவ்வொரு புதிய வாகன உரிமையாளரும் தங்கள் மாநிலத்தில் சாலை வரியைச் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இல்லை. சாலை வரி என்பது பொதுச் சாலைகளில் இயங்கும் ஒவ்வொரு புதிய வாகனத்திற்காகவும் அரசுக்குச் செலுத்தப்படும் வரியைக் குறிக்கிறது. மறுபுறம், GST அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பது அனைத்து வகையான வாகனங்கள் மீதும் 18% என்ற விகிதத்தில் விதிக்கப்படும் ஒரு வரியாகும்.
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் சாலை வரி விதிக்கப்படுகிறது. இது மாநில அரசின் விதிமுறைகளின் கீழ் விதிக்கப்படும் ஒரு கட்டாய மோட்டார் வரியாகும்.
மறுபுறம், குறிப்பிட்ட சுங்கக் கட்டணங்களைப் பெறும் மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளைக் கடக்கும்போது சுங்க வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ளது.
*Savings are based on the comparison between the highest and the lowest premium for own damage cover (excluding add-on covers) provided by different insurance companies for the same vehicle with the same IDV and same NCB. Actual time for transaction may vary subject to additional data requirements and operational processes.
Insurance
*Savings are based on the comparison between the highest and the lowest premium for own damage cover (excluding add-on covers) provided by different insurance companies for the same vehicle with the same IDV and same NCB. Actual time for transaction may vary subject to additional data requirements and operational processes.
Policybazaar Insurance Brokers Private Limited CIN: U74999HR2014PTC053454 Registered Office - Plot No.119, Sector - 44, Gurugram - 122001, Haryana Tel no. : 0124-4218302 Email ID: care@policybazaar.com
Policybazaar is registered as a Composite Broker | Registration No. 742, Registration Code No. IRDA/ DB 797/ 19, Valid till 09/06/2027, License category- Composite Broker
Visitors are hereby informed that their information submitted on the website may be shared with insurers.Product information is authentic and solely based on the information received from the insurers.
BEWARE OF SPURIOUS PHONE CALLS AND FICTITIOUS / FRAUDULENT OFFERS IRDAI or its officials do not involve in activities like selling insurance policies, announcing bonus or investment of premiums. Public receiving such phone calls are requested to lodge a police complaint.
© Copyright 2008-2026 policybazaar.com. All Rights Reserved.